கவிதை-1
அனேகமானவள்
சுவாசம்அற்று கிடக்கிறேன் எனதருமை தோழியே
முழுமை கொண்டென் என்று நினைத்தேன் என்னை நீ தொட்டபோது
ஒளி வேகமும் மெதுவாகி போனது என் மனோ வேகத்தில்,
ரேடார் சப்தமும் நிசப்தமானது உன் சொல்லில்
வீண் குப்பையை வெற்றிடம் ஆக்கினாய் உன்னை தவிர பிரபஞ்சம் ஏதும் கூட அறிகிலேன்
குருடன் கண்ட வெளிச்சம் போல முடவன் ஓடிய ஓட்டம் போல செவிடன் கேட்ட இசை போல ஊமை பாடிய பாடல் போல
புரிந்தும் புரியாத தினப் பொழுது போல அன்பெனும் ஆழியில் முழுவதும் மூழ்க கிடக்கிறேன்
மூர்ச்சையாகி போகும் முன்னே முத்தமிட்டு அழைத்து செல் உன் பதியை உன்னில் பாதியாய்
உனக்கு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது.
Comments
Post a Comment