Srirangam Bye-Election

                                                 
                                                    திருவரங்கம் இடைதேர்தல்    


                                    சமீபத்தில்  நடைபெற்ற  இடைத்தேர்தலில்  96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை அதிமுக  பெற்றுள்ளது .இது ஒன்றும் சாதரணமாக கிடைத்த வெற்றி அல்ல என்று அனைவருக்கும் தெரியும்.இந்த தேர்தல் தமிழகத்தில் சில கருத்துருக்களை மீண்டும் உண்மையாக்கி இருக்கிறது மற்றும் பல கருத்துருக்களை உடைத்து மூலையில் போட்டு இருக்கிறது .ஜெயலலிதா  குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்ட நிலையிலும் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும்,அ திமுகவின் அசல் வாக்கு  வங்கிக்கு எந்த சூழ்நிலையில் பாதிப்பு வராது என்ற எதிர்பார்ப்பு  மீண்டும் நிருபிக்கப்பட்டிருகிறது.இத்தகைய அசைக்கமுடியாத வாக்கு வங்கி  திமுக உட்பட எந்த கட்சிக்கும் கிடையாது.இந்த வெற்றி அதிமுக திமுக இரண்டுக்குமான மாற்று நிச்சயம் பாஜக இல்லை என்பதை ஆணித் தரமாய் கூறிய தேர்தல் .இடைதேர்தல் பணபலம் ,தொகுதிக்கு ஆளும் கட்சியினால் கிடைக்கும் நன்மை ஆகியவற்றை மட்டும் அடிப்படையாய்  கொண்டு மட்டுமே தீர்மானிக்க படுகிற  தேர்தல்  என்பது நிரூபிக்க தக்க ஒன்று என்பதை நம் அனைவர்க்கும் உணர்த்தியுள்ளது.மக்களின் அலட்சியம் பத்திரிகைகளின் விளம்பரம் மற்றும் தவறுகளை மூடி மறைக்கும் திறமை ஆகிய காரண காரியங்கள்  ஆச்சர்யத்தை மட்டுமே  , அரசியலையும் அரசு இயந்திரத்தையும் உன்னிப்பாக நோக்குபவர்களுக்கு அளிக்கின்றன.

Comments